மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
2015ம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான 'பிரேமம்' படம் மூலம் மலையாள ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகையானவர் சாய் பல்லவி. அந்தப் படத்திற்காக மலையாளத்தில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தார். அதன்பின் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் தனது நடிப்பால் அசத்தினார். மலையாளம், தெலுங்கு அறிமுகங்களை முடித்துவிட்டுத்தான் தமிழ் பக்கம் வந்தார்.
விஜய் இயக்கிய 'தியா' படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டுப் போனது. தற்போது அவர் நாயகியாக நடித்துள்ள இரண்டாவது படமான 'மாரி 2' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர், மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இருப்பினும் சாய் பல்லவியை ஒரு தரப்பினர் கடுமையாக கிண்டலடித்து வருகிறார்கள்.
அவரை 'எமோஷன் குயின்' என வர்ணித்து, கீர்த்தி சுரேஷுடன் ஒப்பிட்டு பல மீம்ஸ்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. மீம்ஸ் கிரியேட்டர்களிடம் அதிகம் சிக்கிய நடிகை கீர்த்தி சுரேஷ். அவருக்கடுத்து இப்போது புதிதாக சிக்கியுள்ளவர் சாய்பல்லவி. இருவருமே அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் கொஞ்சம் ஓவராகவே நடிக்கிறார்கள் என்ற கருத்து அந்த மீம்ஸ்களில் இடம் பெற்றுள்ளது.
'மாரி 2' படம் வெளிவந்த பின்தான் சாய்பல்லவியின் நடிப்பு எப்படி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறப் போகிறது என்பது தெரிய வரும். அதுவரை இப்படிப்பட்ட மீம்ஸ்கள் பரவுவதைத் தடுக்க முடியாது.