மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சர்கார் பட விவகாரத்தால் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பாக்யராஜ், மீண்டும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ் பொறுப்பு வகித்தார். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த சர்கார் படம், கதை திருட்டில் சிக்கியபோது, அந்த கதைக்கு உரிமை கொண்டாடிய வருண் ராஜேந்திரன் பக்கம் நியாயம் இருந்ததால் அவருக்கு ஆதரவாக நின்றார் பாக்யராஜ். இந்த விவகாரம் கோர்ட் வரை சென்று இறுதியில் சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் அறிவிப்பு வெளியானது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாக்யராஜ், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் இவரின் முடிவை மற்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை.
சங்கத்தின் மற்ற முக்கிய பொறுப்புகளில் இருந்த, மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட 21 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அதிர்ச்சியான பாக்யராஜ், தனது முடிவை மாற்றிக் கொண்டார். மீண்டும் எழுத்தாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். இந்த தகவலை, கோகோ மாக்கோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் உறுதி செய்தார் பாக்யராஜ்.