சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான டெம்பர் படத்தை, தமிழில் அயோக்யா என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் விஷால். இதில் அவருடன் ராசி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், பூஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். வெங்கட் மோகன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் படப்பிடிப்பு விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள கூனிமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் விஷால் படப்பிடிப்பு நடக்க இருந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் போலீசிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.
நேற்று காலை படப்பிடிப்பு குழுவினர் அந்த வீட்டுக்கு சென்றது. அங்கு வந்த அரசு அதிகாரிகள், "இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது அருகில் மசூதி உள்ளதால் அவர்கள் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்" என்று கூறியுள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் அனுமதி கடிதத்தை காட்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு நடத்தாமல் படக்குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
"அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்புக்கு சென்றோம். ஆனாலும் ஏதோ உள்நோக்கம் காரணமாக அனுமதி மறுத்து விட்டார்கள். இதற்கு அரசியல் காரணம் இருக்கும் என்றும் சந்தேகிக்கிறோம். ஒரு நாள் படப்பிடிப்பு தடையால் தயாரிப்பாளருக்கு 12 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.