'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கேரளாவில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 23வது சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 13ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140 படங்கள் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழாவில் தினமும் நடக்கும் விவாத அரங்கில் இயக்குனர்கள் சுவாதி சிந்து மோகன், சுதா, மீனா பிள்ளை, புத்ததேவ தஷ்குப்தா, கமல், மஜித் மஜிதி (ஈரான்), பினா பவுல், உமேஷ் குல்கர்னி, வெங்கடேஸ்வரன், வெற்றிமாறன், ஷாஜி, நடிகையும், இயக்குனருமான நந்திதாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடுகிறார்கள். இறுதி நாளில் சிறந்த படங்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் விருது வழங்குகிறார்.
இந்த விழாவில் வஸந்த் இயக்கி உள்ள, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற தமிழ் படம் திரையிடப்படுகிறது. பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமவுலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு இந்தப் படம் தயாராகி உள்ளது. சமீபத்தில் நடந்த மும்பை திரைப்பட விழாவில் பலரின் கவனத்தை ஈர்த்த படம் இது.