விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
கேரளாவில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 23வது சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 13ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140 படங்கள் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழாவில் தினமும் நடக்கும் விவாத அரங்கில் இயக்குனர்கள் சுவாதி சிந்து மோகன், சுதா, மீனா பிள்ளை, புத்ததேவ தஷ்குப்தா, கமல், மஜித் மஜிதி (ஈரான்), பினா பவுல், உமேஷ் குல்கர்னி, வெங்கடேஸ்வரன், வெற்றிமாறன், ஷாஜி, நடிகையும், இயக்குனருமான நந்திதாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடுகிறார்கள். இறுதி நாளில் சிறந்த படங்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் விருது வழங்குகிறார்.
இந்த விழாவில் வஸந்த் இயக்கி உள்ள, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற தமிழ் படம் திரையிடப்படுகிறது. பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமவுலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு இந்தப் படம் தயாராகி உள்ளது. சமீபத்தில் நடந்த மும்பை திரைப்பட விழாவில் பலரின் கவனத்தை ஈர்த்த படம் இது.