மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அன்பானவன் அசராவதன் அடங்காதவன் படம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கும், அப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது.
'ஏ.ஏ.ஏ, படத்தைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டு, நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தேன். அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை கொடுக்கும் வரையில், வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. ஆனால், அவர் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்ததோடு, அவரை வைத்து இயக்குநர் சுந்தர் சி புதுப்படம் எடுக்கிறார். அதனால், இதையெல்லாம் வலியுறுத்தி மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்' என, புதிய பிரச்னையை கிளப்பி இருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இந்த பிரச்னை தொடர்பாக, ஓரிரு நாளில் தயாரிப்பாளர் சங்கம் கூடி விவாதிக்க இருக்கிறது. இதனால் சிம்பு மற்றும் அவர் நடிக்கும் படங்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.