'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த ஆண்டு வெளிவந்து நயன்தாராவுக்கு பாராட்டுகளையும், விருதுகளையும் அள்ளித்தந்த படம் அறம். வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம். இதனை நயன்தாராவின் மானேஜர் கொட்டப்பாடி ராஜேஷ் தயாரித்திருந்தார். நயன்தாராவின் தயாரிப்பு என்றும் சொல்வார்கள். புதுமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கினார்.
தற்போது அறம் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. நயன்தாரா நடிக்கிறார். இதனையும் கோபி நயினாரே இயக்குவதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அறம் முதல் பாகம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு சிறுமியை காப்பாற்ற போராடும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் கதை. அந்த கதையின் வழியாக அரசு இயந்திரங்களை கடுமையாக விமர்சித்தார் கோபி நயினார்.
இரண்டாம் பாகத்தின் கதை அரசு சொல்படி நடக்காத மாவட்ட ஆட்சித் தலைவர் நயன்தாரா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் ஆத்திரமடையும் நயன்தாரா பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்கான ஒரு இயக்கம் தொடங்கி போராடுவது மாதிரியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கிற அரசியல் கட்சிகள், இயக்கங்களை கடுமையாக விமர்சிக்கும் படமாக இது அமையும்என தெரிகிறது.