என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் |

கமல் நடித்த ஹே ராம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் வசுந்தராதாஸ். அதன் பிறகு அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்தார். ஏராளமான இந்தி, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். வசுந்தரா தாஸ் அடிப்படையில் ஒரு பாடகி. தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் வசுந்தரா, பெங்ளூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
நேற்று அவர் தனது காரில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பினார். காரை அவரே ஓட்டினார். ராஜாஜி நகர் சிக்னலில் கார் நின்றபோது பின்னால் நின்ற காரின் டிரைவர் ஹாரன் அடித்து தனக்கு வழிவிடுமாறு கூறியிருக்கிறார். சிக்னல் விழாததால் வசுந்தரா காரை எடுக்கவில்லை.
அதன் பிறகு பின்னால் வந்த காரின் டிரைவர் வசுந்தரா தனக்கு வழிவிடாத ஆத்திரத்தில் அவரது காரை துரத்தி உள்ளார். மல்லேஸ்வரத்தில் அவரது காரை வழிமறித்து நிறுத்திய டிரைவர் வசுந்தராவிடம் தகராறு செய்துள்ளார். தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். கையை பிடித்து இழுத்து தாக்கவும் முயன்றதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் பொதுமக்கள் கூடவும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வசுந்தராதாஸ் மல்லேஸ்வரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் தப்பி ஓடியை டிரைவரை தேடி வருகிறார்கள்.




