தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல் நடித்த ஹே ராம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் வசுந்தராதாஸ். அதன் பிறகு அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்தார். ஏராளமான இந்தி, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். வசுந்தரா தாஸ் அடிப்படையில் ஒரு பாடகி. தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் வசுந்தரா, பெங்ளூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
நேற்று அவர் தனது காரில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பினார். காரை அவரே ஓட்டினார். ராஜாஜி நகர் சிக்னலில் கார் நின்றபோது பின்னால் நின்ற காரின் டிரைவர் ஹாரன் அடித்து தனக்கு வழிவிடுமாறு கூறியிருக்கிறார். சிக்னல் விழாததால் வசுந்தரா காரை எடுக்கவில்லை.
அதன் பிறகு பின்னால் வந்த காரின் டிரைவர் வசுந்தரா தனக்கு வழிவிடாத ஆத்திரத்தில் அவரது காரை துரத்தி உள்ளார். மல்லேஸ்வரத்தில் அவரது காரை வழிமறித்து நிறுத்திய டிரைவர் வசுந்தராவிடம் தகராறு செய்துள்ளார். தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். கையை பிடித்து இழுத்து தாக்கவும் முயன்றதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் பொதுமக்கள் கூடவும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வசுந்தராதாஸ் மல்லேஸ்வரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் தப்பி ஓடியை டிரைவரை தேடி வருகிறார்கள்.