சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் கத்தி. லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப்படமும் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியது. இது எனது தாகபூமி குறும்பட கதை என அன்பு ராஜசேகர் அப்போதே குரல் தொடர்ந்து படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் இதற்காக போராடி வருகிறார்.
தற்போது சர்கார் பட விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்திருப்பதால் இதை மீண்டும் முன்னெடுத்துள்ளார் அன்பு ராஜசேகர். அதன்படி அவர் குடும்பத்துடன், வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளார்.
இதுதொடர்பாக அன்பு ராஜசேகர் கூறியிருப்பதாவது : எனது தாகபூமி குறும்படத்தை எனது அனுமதி இல்லாமல் முருகதாஸ் கத்தி திரைப்படமாக எடுத்ததன் தொடர்பாக, கடந்த 4 வருடங்களாக போராடி வருகிறேன். எனக்கான நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்ககோரி தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலை வலியுறுத்தியும், நான் அளித்துள்ள புகார் மனு அடிப்படையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களை வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.