ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
செல்பி எடுத்த வாலிபரின் மொபைலை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார், நான் புத்தன் இல்லை; நானும் மனிதன் தான் என, கூறியுள்ளார். மதுரையில், நேற்று முன்தினம் நடந்த, தனியார் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது, வாலிபர் ஒருவர், மொபைல் போனில் செல்பி எடுத்தார். இதனால், கோபமடைந்த சிவகுமார், அவரது மொபைல் போனை, கீழே தள்ளி விட்டார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது; விமர்சனத்திற்கும் உள்ளானது.
இதுகுறித்து, சிவகுமார் அளித்த பேட்டி: தனிப்பட்ட முறையில், செல்பி எடுப்பது, அவர் குடும்ப விஷயம்; அதைப்பற்றி, நான் ஏதும் கூற விரும்பவில்லை. ஆனால், ஒரு பொது இடத்தில், 300 பேர் பங்கேற்கும் விழாவில், சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி, செல்பி எடுப்பது நியாயமா? விமான நிலையம் மற்றும் திருமண விழாக்களில், பல ஆயிரம் பேருடன், மொபைல் போனில் படம் எடுக்க, போஸ் கொடுத்துள்ளேன். நான் புத்தன் இல்லை; நானும் மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்க வேண்டாம். ஒவ்வொருவரும், அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். மற்றவர்களை நாம் எந்தளவு துன்புறுத்துகிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.