‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
செல்பி எடுத்த வாலிபரின் மொபைலை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார், நான் புத்தன் இல்லை; நானும் மனிதன் தான் என, கூறியுள்ளார். மதுரையில், நேற்று முன்தினம் நடந்த, தனியார் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது, வாலிபர் ஒருவர், மொபைல் போனில் செல்பி எடுத்தார். இதனால், கோபமடைந்த சிவகுமார், அவரது மொபைல் போனை, கீழே தள்ளி விட்டார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது; விமர்சனத்திற்கும் உள்ளானது.
இதுகுறித்து, சிவகுமார் அளித்த பேட்டி: தனிப்பட்ட முறையில், செல்பி எடுப்பது, அவர் குடும்ப விஷயம்; அதைப்பற்றி, நான் ஏதும் கூற விரும்பவில்லை. ஆனால், ஒரு பொது இடத்தில், 300 பேர் பங்கேற்கும் விழாவில், சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி, செல்பி எடுப்பது நியாயமா? விமான நிலையம் மற்றும் திருமண விழாக்களில், பல ஆயிரம் பேருடன், மொபைல் போனில் படம் எடுக்க, போஸ் கொடுத்துள்ளேன். நான் புத்தன் இல்லை; நானும் மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்க வேண்டாம். ஒவ்வொருவரும், அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். மற்றவர்களை நாம் எந்தளவு துன்புறுத்துகிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.