விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் மீது, கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் அளித்திருந்தார். இதை அர்ஜுன் மறுத்த நிலையில், இன்னொரு துணை நடிகையும் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கன்னட சேனல் ஒன்றுக்கு தன் முகத்தை மறைத்தபடி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களில் நானும், எனது கல்லூரி தோழிகளும் பாக்கெட் மணிக்காக ரிச் கேர்ளாக சினிமாவில் நடிப்போம். சுதீப், உபேந்திரா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறோம். அப்போதெல்லாம் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அர்ஜுன் நடித்த 'அர்ஜூனடு' என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பில் நானும், எனது தோழிகளும் 3 நாட்கள் கலந்து கொண்டு நடித்தோம்.
அப்போது நடிகர் அர்ஜூன், என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை கேட்டார். நான் தர மறுத்து விட்டேன். அவர் ஒரு ரெசார்ட்டில் உள்ள அறை எண்ணை கொடுத்து, அங்கு வருமாறு என்னிடமும், எனது தோழிகளிடமும் கூறினார். நான் செல்லவில்லை. எனது தோழிகள், பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளுடன் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் படப்பிடிப்புக்கு செல்வதை நிறுத்திவிட்டோம்.