சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
இன்று நேற்று நாளை படத்தில் டைம் மிஷினை கண்டுபிடிக்கும் டி.எம்.கார்த்திக் என்ற அந்த காமெடி நடிகரை யாரும் மறந்திருக்க முடியாது. அவ்வப்போது சினிமாவில் நடிப்பார். என்னெற்றும் புன்னகை, ராஜாரணி, 10 எண்றதுக்குள்ள, தெறி, செக்கச் சிவந்த வானம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து டுவீட் செய்திருந்தனர். அதனை பாடகி சின்மயி ரி-டுவீட் செய்திருந்தார். தற்போது இந்த புகார்களுக்கு பதில் அளித்துள்ள கார்த்திக், இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
நான் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மீ டூ வில் புகார்கள் வந்துள்ளன. பெண்களிடம் நான் மரியாதையாகவே நடந்து இருக்கிறேன். எந்த பெண்ணுக்கும் தொல்லை கொடுக்க நினைத்தது இல்லை. எனது சந்திப்பை அசவுகரியமாக கருதும் பெண்களை விட்டு நான் விலகி விடுவது உண்டு. என்னால் எந்த பெண்ணுக்காவது சங்கடம் நேர்ந்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீ டூ இயக்கம் என்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவி இருக்கிறது. எனது தவறுகளுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்.
இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.