மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள படம் சண்டக்கோழி-2. இந்த படம் அக்டோபர் 18-ந்தேதி திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே அதேநாளில் வெளியாகிறது.
இதற்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த அஞ்ஞாதவாசி என்ற படத்திற்காக முதன்முதலாக சொந்தக்குரலில் டப்பிங் பேசிய கீர்த்தி சுரேஷ், அதையடுத்து மகாநதிக்கு பேசியவர், மீண்டும் தற்போது பாண்டம் கோடி-2 என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் சண்டக்கோழி-2 படத்திற்காகவும் தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார்.
அதோடு, மகாநதி படத்திற்கு பிறகு இதுவரை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் எந்த படமும் வெளியாகாத நிலையில், இந்த படம் தமிழைப்போலவே தெலுங்கிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாவதால் உற்சாகமாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.