மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'ஒய் திஸ் கொலவெறி' என உலகத்தையே ஆடிப்பாட வைத்தவர் அனிருத். அந்தப் பாடல் யு டியூபில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களையும், படங்களையும் கொடுத்தவர் அனிருத்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'அஞ்ஞாதவாசி' என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் எதிர்பாராதவிதமாக படுதோல்வியடைந்தது. அதன் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'அரவிந்த் சமேதா' என்ற படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பூஜையில் கூட கலந்து கொண்டார். இருந்தாலும், அனிருத் அந்தப் படத்திற்கு இசையமைப்பதிலிருந்து நீக்கப்பட்டார்.
அது குறித்து இப்போது படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் பேசியுள்ளார். “அஞ்ஞாதவாசி' படத்திற்குப் பின் 'அரவிந்த் சமேதா' படத்திற்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், பின்னர் அனிருத் இந்தப் படத்திற்கு சரியான தேர்வு அல்ல என நினைத்தேன். அவரிடமே அது பற்றி பேசினேன். தெலுங்கு திரைப்பட இசையை அவர் இன்னும் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய இசையைப் புரிந்து கொள்ள எனக்கும் சிறிது காலம் வேண்டும். அதனால்தான் பின்னர் தமனை இந்தப் படத்திற்கு இசையமைக்க வைத்தேன். எதிர்காலத்தில் அனிருத்துடன் கண்டிப்பாக பணிபுரிவேன்,” என த்ரிவிக்ரம் தெரிவித்துள்ளார்.
தேவிஸ்ரீபிரசாத், தமன் தமிழ்ப் படங்களுக்கு தெலுங்குப் படங்களுக்கு இசையமைப்பதை நாம் பொறுத்துக் கொள்ளவில்லையா ?. இத்தனைக்கும் 'அஞ்ஞாதவாசி' படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவை.