தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் |

தெலுங்குத் திரையுலகின் இளம் ஸ்டார் ஆன விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான படம் 'நோட்டா'. இப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கடந்த வாரம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் தெலுங்கு ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.
விஜய் தேவரகொண்டாவை ஒரு காதல் நாயகனாகவே பார்த்துப் பழகியவர்கள் அவரை முதல்வர் கதாபாத்திரத்தில் அதிகம் ரசிக்கவில்லை. படத்தில் காதல் காட்சியே இல்லை என்பதும் ஒரு காரணமாக அமைந்தது. மேலும், விஜய்யை ஆக்சன் ஹீரோவாகப் பார்ப்பதில் மற்ற முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் ரசிகர்களும் விரும்பவில்லை. அதனால், அவர்களும் படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இருப்பினும் படம் முதல் நாளிலும், முதல் வார இறுதியிலும் எதிர்பார்த்தது போலவே நல்ல வசூலைக் கொடுத்துள்ளது. முதல் வார இறுதியில் மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. படத்தின் தியேட்டர் உரிமை 25 கோடி என்பதால் இப்படம் நஷ்டத்திலிருந்து தப்பித்துவிடும் என்கிறார்கள். இன்னும் சாட்டிலைட் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவையும் உள்ளதால் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் லாபத்தைக் கொடுத்துவிடும்.
ஒரு சில ஏரியாக்களில் மட்டும் கொஞ்சமாக நஷ்டம் வரலாம் என்கிறார்கள். படத்தில் இன்னும் அதிகமான அரசியல் வசனங்களையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் இயக்குனர் அமைத்திருந்தால் இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என கோலிவுட்டில் பலரது விமர்சனமாக உள்ளது.