தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் படம் தேவ். ரஜத் ரவி சங்கர் இயக்கும் இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்து வந்தபோது மழை, நிலச்சரிவு காரணமாக அங்கு போடப்பட்டிருந்த செட் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. அதையடுத்து அங்கிருந்து படக்குழுவினர் பாதுகாப்பாக சென்னை திரும்பினர். அந்த வகையில், குலுமணாலியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் தேவ் படக்குழுவுக்கு ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடர தற்போது கார்த்தியின் தேவ் படக்குழு புனேயில் முகாமிட்டுள்ளது. குலுமணாலியில் படமாக்க முடியாத முக்கிய காட்சிகள் புனேயில் தான் படமாகிறதாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த தேவ் படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.