மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக தற்போது கே.பாக்யராஜ் பொறுப்பேற்றுள்ளார். முன்பு தலைவராக இருந்த விசு தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதில் 37 லட்சம் நிதி வைத்துள்ளார். அந்த நிதியை தற்போதுள்ள நிர்வாகத்திடம் அவர் ஒப்படைக்க மறுப்பதாக தெரிகிறது. இதனால் விசு மீது பாக்யராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நிதி மோசடி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விசுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ள விசு, கே.பாக்யராஜ் மீது அவதூறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் இருந்த நாட்களில் இந்தியா திரும்பியவுடன் அறக்கட்டளை விஷயத்தை பேசி சுமூகமாக முடிக்கிறேன் என்று ஆர்.கே.செல்வமணியிடம் சொன்னேன். அதற்குள் இங்கு எத்தனை குழப்பங்கள். வந்தவுடன்தானே ஒவ்வொன்றாக தெரிகிறது. என் மீதும் பிறைசூடன், மதுமிதா ஆகியோர் மீதும் மோசடி, அபகரிப்பு, கூட்டு சதி, கையாடல் ஆகிய கேட்டாலே காதுகள் கூசக்கூடிய மூன்றாந்தர வார்த்தைகளை உள்ளடக்கிய புகார் ஒன்றை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர்கள் கொடுப்பார்களாம். எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் எங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்குமாம்.
ஆனால் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாவற்றையும் துடைத்து போட்டு விட்டு, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வெள்ளையும் சொள்ளையுமாக வரவேண்டுமாம். இது என்ன அராஜக எதிர்பார்ப்பு? நாங்கள் வர மாட்டோம். ஆனால் கண்டிப்பாக கிரிமினல் வழக்குக்கான அவதூறு நோட்டீசு எங்கள் சார்பில் விரைவில் பாக்யராஜ், மனோஜ்குமார், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு வரும். இது பயமுறுத்தல் அல்ல. பணிவான தகவல். படித்து பார்க்காமல் கையெழுத்து போடும் பழக்கமுள்ள ஒரு தலைமையிடம் நியாயம் கேட்கும் சட்ட ரீதியான அணுகு முறை. இவ்வாறு விசு கூறியுள்ளார்.