கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! |
கடந்த சில தினங்களுக்கு முன்பு வயதான தோற்றத்தில் ஒருவர் நடந்த வருவது போன்ற படம் வெளியானது. இது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் என்றும், விஜய்சேதுபதி வயதான விவசாயி வேடத்தில் இப்படி தோன்றுகிறார் என்றும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது பாலாஜி தரணிதரன் இயக்கும் சீதக்காதி படத்தின் தோற்றம் என்றும் செய்திகள் வெளியானது. விஜய் சேதபதிக்கு வாழ்த்துக்களும் குவிந்தது. இந்த நிலையில் அது விஜய் சேதுபதி இல்லை, நெல்லையை சேர்ந்த கவிஞர் கிருஷி என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கவிஞர் கிருஷி கூறியதாவது: திருநெல்வேலியில் நடந்த சித்த அறக்கட்டளை அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது எங்கு எனது நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படம் அது. நான்தான் விஜய்சேதுபதி என்ற பரபரப்பால் என் மீது அன்பு கொண்ட உள்ளங்களை அறிந்து கொள்ள முடிகிறது. என்றார்.
"ஒரு விஷயத்தை பகிர்வதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை விஷயம் கூட பின்னபற்றப்படாதது வருத்தம் அளிக்கிறது" என்கிறார்கள் மணிகண்டனும், பாலாஜி தரணிதரனும்.