மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் வியந்து பார்க்கப்படும் ஒரு இயக்குனர் மணிரத்னம். அவருடைய படங்களின் கதைகள் நிஜ வாழ்க்கையிலிருந்தோ அல்லது சரித்திர காலக் கதைகளில் இருந்தோ தழுவி எடுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகின்றன. 'கர்ணன்' பற்றிய தழுவல்தான் 'தளபதி', பம்பாய் வரதராஜ முதலியார் பற்றிய தழுவல்தான் 'நாயகன்', ராமாயணத்தின் தழுவல்தான் 'ராவணன்' என சில பல உதாரணங்களைச் சொல்லலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளிவர உள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் கதை கூட கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்'ஐ தழுவி எடுக்கப்பட்டதுதான் என்று தற்போது பேச்சு எழுந்துள்ளது. குடும்பத்தின் மூத்தவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தின் தலைமை யார் என்பது குறித்து மகன்களுக்குள் எழும் போட்டிதான் 'செக்கச் சிவந்த வானம்' கதை என்கிறார்கள்.
'பொன்னியின் செல்வன்'ஐ சுருக்கித்தான் படத்தின் கதையையும், கதாபாத்திரங்களையும் மணிரத்னம் உருவாக்கியிருக்கிறார். 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்தவர்களுக்கு படம் வெளிவந்த பிறகு அது தெரியத்தான் போகிறது.