ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை இயக்குனர் ராமச்சந்திரன் முள்ளும் மலரும் சீரியலுக்காக தமிழுக்கு அழைத்து வந்தார். இந்த தொடரில் முனிஷ்ராஜா ஹீரோ, தேஜஸ்வினி, தர்ஷா, பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலாம்பிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுவரை 166 எபிசோட்கள் ஒளிபரப்பாகி உள்ளது.
இந்த நிலையில் ஹீரோயின்களில் ஒருவரான தேஜஸ்வினி சீரியலில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பொண்ணுக்கு தங்க மனசு தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
விலகல் குறித்து தேஜஸ்வினி தரப்பில் கூறப்படுவதாவது: சீரியல் தொடங்கும்போது தேஜஸ்வினிதான் ஹீரோயின். சில எபிசோட்களுக்கு பிறகு தர்ஷா உள்ளே கொண்டு வரப்பட்டார். அதன் பிறகு கதையில் தர்ஷாவுக்கு முக்கியத்தும் தரப்பட்டது. ஒரு கட்டத்தில் தர்ஷாவை ஹீரோயினாக மாற்றி, தேஜஸ்வினி கேரக்டரை மெல்ல மெல்ல வில்லியாக மாற்றினார்கள். அது பிடிக்காமல்தான் தேஜஸ்வினி வெளியேறினார் என்கிறார்கள்.