ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெங்காலி நடிகையாக இருந்து தொட்டாசினுங்கி படத்தின் மூலம் தமிழ் நடிகை ஆனவர் தேவயானி. கிளாமர் இல்லாத குடும்ப பாங்கான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களையும், பெண்களையும் கவர்ந்தவர். தனது கணவர் ராஜகுமாரன் இயக்கிய திருமதி தமிழ் படம் தான் கடைசியாக அவர் ஹீரோயினாக நடித்தது. அதில் ராஜகுமாரன் ஜோடியாகவே நடித்தார். அதற்கு முன்பே அக்கா, அண்ணி, கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது களவாணி மாப்பிள்ளை படத்தின் மூலம் மாமியாராகியிருக்கிறார். படத்தில் அவர் தினேஷின் மாமியாராகவும், அதிதி மேனனின் தாயாகவும் நடித்துள்ளார். இதனை பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கி உள்ளார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி காந்தி மணிவாசகம் கூறியதாவது:
என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல் ,நிறைய காமெடி வைத்திருப்பார். அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது, ஜெயித்திருக்கிறது. மாமியார், மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.