எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

பெங்காலி நடிகையாக இருந்து தொட்டாசினுங்கி படத்தின் மூலம் தமிழ் நடிகை ஆனவர் தேவயானி. கிளாமர் இல்லாத குடும்ப பாங்கான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களையும், பெண்களையும் கவர்ந்தவர். தனது கணவர் ராஜகுமாரன் இயக்கிய திருமதி தமிழ் படம் தான் கடைசியாக அவர் ஹீரோயினாக நடித்தது. அதில் ராஜகுமாரன் ஜோடியாகவே நடித்தார். அதற்கு முன்பே அக்கா, அண்ணி, கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது களவாணி மாப்பிள்ளை படத்தின் மூலம் மாமியாராகியிருக்கிறார். படத்தில் அவர் தினேஷின் மாமியாராகவும், அதிதி மேனனின் தாயாகவும் நடித்துள்ளார். இதனை பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கி உள்ளார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி காந்தி மணிவாசகம் கூறியதாவது:
என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல் ,நிறைய காமெடி வைத்திருப்பார். அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது, ஜெயித்திருக்கிறது. மாமியார், மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.