விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
தமிழ் சினிமா உலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்டவர் ஹன்சிகா. அவருக்கு தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு ஆகியோருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவரது ஐம்பதாவது படமாக 'மகா' என்ற படம் விரைவில் தயாரிக்கப்பட இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் அந்தப் படம் குறித்தும், பொதுவான விஷயங்கள் குறித்தும், ஹன்சிகா கூறியதாவது:
இப்பதான் சினிமாவுக்கு வந்த மாதிரி இருக்கும். இதோ ஐம்பதாவது படத்தில் நடிக்கப் போகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. 'மகா' படத்தில் கதாநாயகிக்குத்தான் கதைப்படி முக்கியத்துவம். இப்படிப்பட்ட படத்தில் நடிப்பதும் பெருமைதான்.
நான் வெற்றிகரமான நடிகைதான் என்பதை மீண்டும் நிரூபிப்பேன். அதற்காக நான் எவ்வளவு கடுமையாக உழைக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும் விரைவில் வெளியிலும் தெரியும். மிக நெருக்கத்திலேயே, சினிமாவில் உச்சத்தையும் தொடுவேன்.
எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்கிறவர்கள், அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன் என்றால், நான் கடந்த ஆண்டு மட்டும் 18 முதல் 19 பட வாய்ப்புகளை மறுத்துள்ளேன். காரணம், கதை எனக்குப் பிடிக்கவில்லை. ஆண்டுக்கு 8 படம் பண்ணிக் கொண்டிருந்த நான், இனி, 4 படங்கள் நடித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
ஓவியம் வரைவது எனக்கு பிடிக்கும். நேரம் கிடைத்தால், நன்கு வரைவேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.