காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! |
கேரளாவில் வரலாறு காணாத பெரு மழையால் அந்த மாநிலம் பெரும் பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீடு, பொருள், பணம் இழந்து, உணவு பொருளுக்கு கூட போராடி வருகிறார்கள். பல மாநில மக்கள் அந்த மாநில மக்களுக்கு உதவி வருகிறார்கள். இதுவரை சுமார் 20 ஆயிரம் கோடி அளவிற்கு பாதிப்பு என்கிறார்கள். கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து தக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
மதிப்பிற்குரிய பிரதமரே, கேரள வெள்ளப் பாதிப்பை, தேசியப் பேரிடராக உடனே அறிவிக்கும்படி வேண்டுகிறேன். மேலும், நிவாரண நிதியையும் அதிகமாக வழங்க கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நம் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் செயல்படுத்தத் தேவையான உதவிகளை வழங்குங்கள். இவ்வாறு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.