டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவில் வரலாறு காணாத பெரு மழையால் அந்த மாநிலம் பெரும் பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீடு, பொருள், பணம் இழந்து, உணவு பொருளுக்கு கூட போராடி வருகிறார்கள். பல மாநில மக்கள் அந்த மாநில மக்களுக்கு உதவி வருகிறார்கள். இதுவரை சுமார் 20 ஆயிரம் கோடி அளவிற்கு பாதிப்பு என்கிறார்கள். கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து தக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
மதிப்பிற்குரிய பிரதமரே, கேரள வெள்ளப் பாதிப்பை, தேசியப் பேரிடராக உடனே அறிவிக்கும்படி வேண்டுகிறேன். மேலும், நிவாரண நிதியையும் அதிகமாக வழங்க கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நம் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் செயல்படுத்தத் தேவையான உதவிகளை வழங்குங்கள். இவ்வாறு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.