சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கேரளாவில் வரலாறு காணாத பெரு மழையால் அந்த மாநிலம் பெரும் பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீடு, பொருள், பணம் இழந்து, உணவு பொருளுக்கு கூட போராடி வருகிறார்கள். பல மாநில மக்கள் அந்த மாநில மக்களுக்கு உதவி வருகிறார்கள். இதுவரை சுமார் 20 ஆயிரம் கோடி அளவிற்கு பாதிப்பு என்கிறார்கள். கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து தக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
மதிப்பிற்குரிய பிரதமரே, கேரள வெள்ளப் பாதிப்பை, தேசியப் பேரிடராக உடனே அறிவிக்கும்படி வேண்டுகிறேன். மேலும், நிவாரண நிதியையும் அதிகமாக வழங்க கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நம் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் செயல்படுத்தத் தேவையான உதவிகளை வழங்குங்கள். இவ்வாறு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.