அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கேரளாவில் வரலாறு காணாத பெரு மழையால் அந்த மாநிலம் பெரும் பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீடு, பொருள், பணம் இழந்து, உணவு பொருளுக்கு கூட போராடி வருகிறார்கள். பல மாநில மக்கள் அந்த மாநில மக்களுக்கு உதவி வருகிறார்கள். இதுவரை சுமார் 20 ஆயிரம் கோடி அளவிற்கு பாதிப்பு என்கிறார்கள். கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து தக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
மதிப்பிற்குரிய பிரதமரே, கேரள வெள்ளப் பாதிப்பை, தேசியப் பேரிடராக உடனே அறிவிக்கும்படி வேண்டுகிறேன். மேலும், நிவாரண நிதியையும் அதிகமாக வழங்க கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நம் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் செயல்படுத்தத் தேவையான உதவிகளை வழங்குங்கள். இவ்வாறு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.