மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளா மாநிலத்தின் பெருவாரியான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பெரும்பாலான வீடுகள் தண்ணீரில் மூழ்கியிருப்பதால், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்த்திரையுலகைச்சேர்ந்த சூர்யா-கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து ரூ. 25 லட்சம் கேரளா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினர். அவர்களைத் தொடர்ந்து விஜயசேதுபதியும் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கிய நிலையில், ரஜினிகாந்த் ரூ. 10 லட்சம் நிதி வழங்கினார்.
அதன்பிறகு தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் ரூ. 10 லட்சம் தலா நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், நடிகர் விக்ரம் ரூ. 35 லட்சம் கேரளா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.