மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாடலாசியர் பா.விஜய் தயாரித்து நடித்துள்ள படம் ஆருத்ரா. இதற்கு முன்பு ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபெரி, நையப்புடை, படங்களில் நடித்தார். ஸ்ட்ராபெரி படத்தை தயாரித்து இயக்கிய பா.விஜய் ஆருத்ராவையும் இயக்கி உள்ளார். இதில் பா.விஜய்யுடன் சோனி செரிஸ்டா, மேகாலி, தக்ஷிதா குமாரி, சஞ்சனாசிங், பேபி யுவா. எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார், ஷான் லேகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பா.விஜய் பேசியதாவது:
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான படமாக ஆருத்ரா உருவாகி உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நிருபயாவுக்கு ஏற்பட்ட நிலை மனதை பாதித்து அதையட்டி இந்தப் படத்தின் கதையை எழுதினேன். அதற்கு பிறகு எத்தனையோ குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையை 17 பேர் நாசம் செய்திருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவர வேண்டிய நேரம் இதுதான்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முதல் காரணமே அவர்களது பெற்றோர்கள்தான். அவர்களின் பொறுப்பற்ற தன்மையால்தான் அருகில் இருப்பவர்களே குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இதுகுறித்து இந்தப் படம் விழிப்புணர்பு ஏற்படுத்தும்.
இரண்டு வருடமாக போராடி படத்தை முடித்து தணிக்கை குழுவுக்கு கொண்டு சென்றால் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் மவுனமாக அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. கடைசியில் படத்துக்கு என்ன சான்றிதழ் கொடுப்பது என்று எங்களுக்கு தீர்மானிக்க முடியவில்லை. அதனால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்புகிறோம் என்றார்கள்.
எனக்கு எதுவுமே புரியவில்லை. இது நல்லதுக்கு நடக்கிறதா கெட்டதுக்கு நடக்கிறதா என்று. பல கோடி மூதலீடு செய்திருக்கிறோம். மொத்த உழைப்பையும் கொட்டியிருக்கிறோமே என்று தவித்தேன், மறுதணிக்கை குழு படத்தை பார்த்துவிட்டு சில கொலை காட்சிகளில் வன்முறை அதிகமாக இருக்கிறது. அதை குறைத்துவிடுங்கள் என்று கூறி யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள்.
தணிக்கையில் இருந்த அந்த சில மாதங்களில் நான் தவித்துப்போய் இருந்தேன். இப்போது எல்லாம் முடிந்து படம் இந்த மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் 20 கோடி ரூபாய் லாபம் கிடைத்தாலும் இனி சொந்தப் படம் எடுக்க மாட்டேன். அப்படிப்பட்ட கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கிறேன் என்றார்.