Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பா.விஜய்யை பரிதவிக்க விட்ட தணிக்கை குழு

12 ஆக, 2018 - 13:15 IST
எழுத்தின் அளவு:
censor-board-recensored-pa.vijay-movie

பாடலாசியர் பா.விஜய் தயாரித்து நடித்துள்ள படம் ஆருத்ரா. இதற்கு முன்பு ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபெரி, நையப்புடை, படங்களில் நடித்தார். ஸ்ட்ராபெரி படத்தை தயாரித்து இயக்கிய பா.விஜய் ஆருத்ராவையும் இயக்கி உள்ளார். இதில் பா.விஜய்யுடன் சோனி செரிஸ்டா, மேகாலி, தக்ஷிதா குமாரி, சஞ்சனாசிங், பேபி யுவா. எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார், ஷான் லேகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பா.விஜய் பேசியதாவது:

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான படமாக ஆருத்ரா உருவாகி உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நிருபயாவுக்கு ஏற்பட்ட நிலை மனதை பாதித்து அதையட்டி இந்தப் படத்தின் கதையை எழுதினேன். அதற்கு பிறகு எத்தனையோ குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையை 17 பேர் நாசம் செய்திருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவர வேண்டிய நேரம் இதுதான்.


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முதல் காரணமே அவர்களது பெற்றோர்கள்தான். அவர்களின் பொறுப்பற்ற தன்மையால்தான் அருகில் இருப்பவர்களே குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இதுகுறித்து இந்தப் படம் விழிப்புணர்பு ஏற்படுத்தும்.


இரண்டு வருடமாக போராடி படத்தை முடித்து தணிக்கை குழுவுக்கு கொண்டு சென்றால் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் மவுனமாக அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. கடைசியில் படத்துக்கு என்ன சான்றிதழ் கொடுப்பது என்று எங்களுக்கு தீர்மானிக்க முடியவில்லை. அதனால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்புகிறோம் என்றார்கள்.


எனக்கு எதுவுமே புரியவில்லை. இது நல்லதுக்கு நடக்கிறதா கெட்டதுக்கு நடக்கிறதா என்று. பல கோடி மூதலீடு செய்திருக்கிறோம். மொத்த உழைப்பையும் கொட்டியிருக்கிறோமே என்று தவித்தேன், மறுதணிக்கை குழு படத்தை பார்த்துவிட்டு சில கொலை காட்சிகளில் வன்முறை அதிகமாக இருக்கிறது. அதை குறைத்துவிடுங்கள் என்று கூறி யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள்.


தணிக்கையில் இருந்த அந்த சில மாதங்களில் நான் தவித்துப்போய் இருந்தேன். இப்போது எல்லாம் முடிந்து படம் இந்த மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் 20 கோடி ரூபாய் லாபம் கிடைத்தாலும் இனி சொந்தப் படம் எடுக்க மாட்டேன். அப்படிப்பட்ட கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கிறேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in