மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் விக்ரமின் மகன் துருவ். அமெரிக்காவில் நடிப்பு, மற்றும் இயக்கம் படித்துள்ள துருவ் தற்போது பாலா இயக்கத்தில் வர்மா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக். இதன் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக நேபாளத்தில் நடந்தது. படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில்தான் துருவ் சென்னை திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு துருவ் சென்ற சொகுசு கார் தேனாம்பேட்டை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு ஆட்டோ டிரைவர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து நடந்தது எப்படி? காரை ஓட்டியது துருவா?, வேறு டிரைவரா, காருக்கு என்ன சேதம் என்ற விபரங்கள் குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தினர்.
துருவை கைது செய்த போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே அவரை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.