மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அதே அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் 17 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
இதையடுத்து தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அவர்களுக்கு வாதாட எந்த வக்கில்களும் முன்வராத நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை வரலட்சுமி விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், இதுபோன்ற தவறு செய்பவர்கள் மைனரோ, மேஜரோ யாராக இருந்தாலும் அவர்களை தூக்கில் போட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தப்பான ஆண்களுக்கு பயம் வரும். பல பெண்களின் உயிர்கள் இதுபோன்ற அரக்கர்களால் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. மாற்றத்திற்கான நேரம் இது. சரியான தீர்ப்பு வழங்குங்கள்.
மிருகங்களின் முகங்களை எதற்காக சரியாக தெரியாதபடி மறைக்கிறீர்கள். ஒரு சிறுமியை பலாத்காரம் செய்தபோது நீங்கள் உங்களின் முகத்தை மறைக்கவில்லை. அந்த கொடூரன்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.