இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கம் நடிகைகளில் நயன்தாரா தான் முன்னணியில் இருக்கிறார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படத்திற்கு அவர் சுமார் 4 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.
அவருடைய கால்ஷீட் கிடைக்காதா என பல முன்னணி ஹீரோக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கான படங்களையும், கதைகளையும் தேர்வு செய்தவதில் நயன்தாரா தற்போது மிகவும் கவனமாக இருக்கிறார் என்கிறார்கள்.
நயன்தாராவிற்குப் போட்டியாக தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதைக்கு யாருமே இல்லை. அவருக்கான இடத்திற்கும், சம்பளத்திற்கும் எந்தப் போட்டியும் இல்லை. மற்ற முன்னணி நடிகைகளும் பொறாமைப்படும் அளவிற்கு நயன்தாரா தனி இடத்தில் உள்ளார்.
ஹிந்தியிலிருந்து சிலர் வந்தாலும் அவர்களால் நயன்தாராவிற்குப் போட்டியாக மாற முடியவில்லை. பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் அவருடைய அப்பாவின் வாழ்க்கை வரலாறான 'என்டிஆர்' படத்தில் நாயகியாக நடிக்க வித்யாபாலனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அவருக்கு சம்பளமாக 2 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்தான் நாயகி என்றாலும் படத்தில் அவர் அதிக நேரம் வரமாட்டார் என்கிறார்கள். மேலும், குறைந்த நாட்களில் அவருடைய பகுதி படப்பிடிப்பை முடித்துவிடுவார்களாம். இருப்பினும் நயன்தாராவின் சம்பளத்தை விட குறைவான சம்பளத்திற்கு வித்யாபாலன் நடிக்க சம்மதித்தது ஆச்சரியமாக உள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.