விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
எந்த வேடத்திலும் என்னால் சாதிக்க முடியும், என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் நடிகை தன்ஷிகா. பேராண்மை படத்தில் வீரமான பெண்ணாக நடித்த தன்ஷிகா, அரவான் படத்தில் கிராமத்து பெண்ணாக கலக்கியிருந்தார். அரவான் படத்தில் அம்மணியின் நடிப்பு ரொம்பவே பேசப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவர், தன்னால் எந்த மாதிரியான கேரக்டரிலும், துணிச்சலுடன் நடிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
தன்ஷிகா அளித்துள்ள பேட்டியில், எனக்கு தமிழ் தெரியும் என்பதால் தான் பேராண்மை படத்தில் ஜனநாதன் சார் வாய்ப்பு தந்தார். இந்த படத்தில் என் கேரக்டரையும், நடிப்பையும் பார்த்து தான் வசந்தபாலன் சார் அரவான் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். என்னால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன். மற்ற நடிகைகள் மாதிரி கவர்ச்சியாகவும் என்னால் நடிக்க முடியும். மாஞ்சா வேலு படத்தில் அப்படித்தான் நடித்திருக்கிறேன்.
அரவான் படத்திற்காக நிறைய ஹோம்-ஒர்க் செய்தேன். சென்னையில் வளர்ந்ததால் கிராமத்து பெண் பாடிலேங்கு வேஜ் கொண்டு வர நிறைய சிரமப்பட்டேன். அதோடு, மதுரை பாசையேயும் சரியாக வராமல் கஷ்டப்பட்டடேன். என்றாலும் டப்பிங் வரும் போது சரி செய்து விட்டேன். போட்டின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிச்ச மூணு படங்களிலேயே வெரைட்டியான ரோல் பண்ற நடிகைன்னு பெயர் கிடைச்சிருக்கு. பேராண்மையில் தைரியமான பொண்ணு. மாஞ்சாவேலுவில் ரொமான்ஸ். அரவானில் கிராமத்துப் பெண். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதனால் எந்த வேடத்திலும் என்னால் சாதிக்க முடியும், என்று கூறியிருக்கிறார்.