விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் அவன் இவன். பாலா இயக்கிய இந்தப் படத்தில் ஆர்யா, விஷால், ஜனனி அய்யர், மதுஷாலினி நடித்திருந்தனர். பாலா இயக்கி இருந்தார், கல்பாத்தி அகோரம் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும் தவறாக சித்தரித்திருப்பதாக கூறி சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அம்பாசமுத்திரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜூன் 20ந் தேதி சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் கைது வாரண்ட்டு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேற்று அம்பாசமுத்திரம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
"அவன் இவன் முழுக்க முழுக்க கற்பனை கதைதான் யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை" என்று பாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.