விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சினிமாவில் எல்லா துறையிலும் பணியாற்றுகிறவர்களுக்கு அடிமனதில் இருக்கும் ஒரு ஆசை நடிப்பது தான். போஸ்டர் ஒட்டும் பையனிலிருந்து ஆர்ட் டைரக்டர் வரைக்கும் நடிக்க வந்து விட்டார்கள். சண்டை இயக்குனர்களில் சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், ஜாக்குவார் தங்கம், தளபதி தினேஷ், கனல் கண்ணன், பெப்ஸி விஜயன் உள்பட பலர் நடிகர் ஆகிவிட்டார்கள்.
இந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறார் ஸ்டண்ட் சிவா. அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஸ்டண்ட் சிவாவும் நடிகர் ஆகிவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக மாஸ்டராக இருந்தவர் வேட்டையாடு விளையாடு படத்தில் சிறு கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு தற்போது கோலி சோடா படத்தில் முழு வில்லனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார் இதுகுறித்து அவர் கூறியதாவது:
முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது. கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறேன். தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளேன்.
ஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன், கோலி சோடா 2ல் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார். அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சண்டை இயக்குனராக பணியாற்றுவதுடன் தொடர்ந்த நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன். என்கிறார் ஸ்டண்ட் சிவா.