ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து, அதன் பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் குட்டி பத்மினி. இப்போது சின்னத்திரையில் கதாசிரியர், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத்துடன் பவனி வருகிறார்.
சின்னத்திரை தயாரிப்பார்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் கில்டு ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். இதோடு சமீபகாலமாக தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.
3 வயதில் நடிக்க வந்த குட்டி பத்மினி எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறை வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார். தனது சுயசரிதையில் எதையும் மறைக்காமல் எழுதி வருகிறாராம். யாரையும் மறைமுகமாக குறிப்பிடாமல் நேரிடியாக பெயர் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். இந்த சுயசரிதை எப்போது வெளியே வரும் என தெரியவில்லை.