ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா துறையில் கால்பதித்த லாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. ஆந்திராவைச் சேர்ந்த லாவண்யா, எங்க மாமா என்ற தெலுங்கு படத்தில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
படையப்பா, வில்லன், தெனாலி உள்பட பல படங்களிலும் நடித்தார். ஹீரோயின் தோழி, ஹீரோவின் தங்கை கேரக்டர்களில் நடித்த லாவண்யா. சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். சின்னத்திரைக்கு வந்த லாவண்யா இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த சீரியல் ரோமாபுரி பாண்டியன்.
தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கு பிரேக் விட்டிருக்கிறார். சீரியல்களால் பல சினிமா வாய்ப்புகள் தவறியதால் இந்த முடிவாம். தற்போது ஆறாம் திணை என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் லாவண்யா, தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆறாம் திணை படம் அதற்கு ஒரு திருப்பத்தை தரும் என்று நம்புகிறார். லாவண்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.