பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நடிகர் விஜயகாந்த், தன்னுடைய படத்தின் சூட்டிங் நடக்கும்போது, படத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான உணவையே வழங்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு போட்டு, அதன்படியே செய்யச் சொல்வார். அனைத்து தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
அதே பாணியில், இப்போது, நடிகர் அஜித்தும் செய்து வருவதாக, தமிழ் சினிமா உலகில் பேசுகின்றனர். தற்போது, விஸ்வாசம் படத்தில், நடிகைகள் நயன்தாரா, கலைராணி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் அஜித், விஜயகாந்த் பாணியை படபிடிப்பில் தொடர்வதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், மூன்று முறை தங்களுக்கு பிரியாணி வழங்கியதாக, நடிகை கலைராணி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நடிகர் அஜித், ரிசர்வ்டு டைப் ஆசாமி. அவர் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். சக நடிகர் - நடிகையரோடு கூட சகஜமாக பழக மாட்டார் என்று தான், கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், விஸ்வாசம் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கும் என்னோடு, அஜித், மிகவும் சகஜமாக பழகினார். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், இதுவரை மூன்று முறை அனைவருக்கும் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார். ஆக, அஜித் குறித்து, வெளியில் பரவி இருக்கும் தகவலுக்கும், அவர் படப்பிடிப்பின் போது நடந்து கொள்ளும் விதங்களுக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இவ்வாறு கலைராணி கூறியுள்ளார்.