விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் ஆகிய படங்களில் நடித்தும் சந்தீப் கிஷனுக்கு தமிழில் மார்கெட் சூடுபிடிக்கவில்லை. ஆனாலும் தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படம் சந்தீப்கிஷன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கிறது. நரகாசூரன் படத்தை அடுத்து சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சந்தீப் கிஷன். இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். இவர் ஏற்கனவே திருடன் போலீஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கியவர்.
எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப்படத்துக்கு, பி.எஸ்.வர்மா ஒளிப்பதி செய்கிறார். இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
சந்தீப்கிஷன் ஹீரோ என்பதால் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தெலுங்குப்பதிப்பை தானே வாங்கிக் கொள்வதாக உறுதியளித்துள்ளாராம் சந்தீப் கிஷன்.