மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் பேரரசுவிடம் உதவியாளராக இருந்தவர் முரபாசெலன். இப்போது அவர் இயக்குனராக புரமோஷனாகி என்ன தவம் செய்தேனோ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை இணைந்த கைகள் கலைக்கூடம் சார்பில் எஸ்.செந்தில்குமார் தயாரிக்கிறார்.
கஜினி முருகன், விஷ்ணுப்பரியா என்ற புதுமுகங்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், ரிஷா, சிங்கம்புலி, ஆர்த்தி, ஆர்.என்.ஆர்.மனோகரன் நடித்துள்ளனர். நவுஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவ்குரு இசை அமைத்துள்ளார்.
"ஒரு செல்வாக்கு மிக்க அரசியல்வாதியின் மகளை சைக்கிளில் குச்சி ஐஸ் விற்கும் வாலிபன் காதலிப்பதும். அதனால் வரும் பிரச்சினைளும் தான் கதை. பலம் கொண்ட யானை மாதிரியான வில்லனை சின்ன கட்டெறும்பான ஹீரோ எப்படி தனது புத்தி சாதுர்யாத்தால் வெல்கிறான் என்பது திரைக்கதை. படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் படம் வெளிவருகிறது" என்றார் இயக்குனர் முரபாசெலன்.