மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். அந்த 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்திற்கு இன்று பலரும் ஆசைப்படுகிறார்கள் என சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த 'காலா' பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் பேசினார். அவர் பேசிய 24 மணி நேரத்திற்குள் அப்படி நினைப்பதில் தவறில்லை என நடிகர் சிம்பு, தனுஷுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
'செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தால் அது பற்றி ஒரு வீடியோவில் நீண்ட நேரம் பேசியிருக்கிறார் சிம்பு. அதில் 'சூப்பர் ஸ்டார்' என்பது பற்றிய அவருடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“எம்ஜிஆர் மாதிரி ரஜினி சார் மாதிரி வரணும்கற ஆசை இருந்தது. ஆனால், அவங்களா மாற ஆசை இல்லை. அந்த மாதிரி ஆகணும்கற ஆசை இருந்ததாலதான் நான் இப்ப இப்படி வந்திருக்கேன். என்னை ரொம்ப டீமோடிவேட் பண்ணாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஷேக்ஸ்பியர் மாதிரி வரணும், மைக்கேல் ஜாக்சன் மாதிரி வரணும், கலைஞர் தாத்தா மாதிரி வரணும், சிஎம் மாதிரி வரணும்னு எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும்.
நான் எம்ஜிஆர் மாதிரி வரணும், ரஜினி மாதிரி வரணும்னு சொன்னப்போ கிளாஸ்ல கூப்பிட்டு என்னை முட்டி போட வச்சாங்க. டீச்சர் திரும்பவும் கேட்டாங்க, இனிமே ஒழுங்கா படிக்கணும்னு சொன்னாங்க, இனிமேல் ரஜினி மாதிரி வரணும்னு காமெடிலாம் வச்சிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் சீரியசா ரஜினி மாதிரி வரணும்னு சொன்னேன்.
எல்லாரும் தப்பான ஒரு விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்கிறாங்க. தியாகராஜ பாகவதர் இருந்தாரு, எம்ஜிஆர் இருந்தாரு, ரஜினி சார் இருந்தாரு, ஒவ்வொரு கால கட்டங்கள்ல ஒருத்தர் இருந்தாங்க. ஆனால், ரஜினி மாதிரி யாரும் வரக் கூடாதுன்னு யாரும் சொல்லக் கூடாது.
இப்படி யார் தெரியுமா சொல்வாங்க, தான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் சொல்வாங்க. அப்படி பேசறவங்களுக்கு ஒண்ணு புரியலை. தியாகராஜ பாகவதர் மாறி வரணும்னு நினைச்சதால எம்ஜிஆர் வந்தாரு. எம்ஜிஆர் மாதிரி வரணும்னு நினைச்சதால ரஜினி வந்தாரு. ரஜினி மாதிரி வரணும்னு நினைச்சதால அஜித், விஜய் வந்திருக்காங்க. இவங்கள மாதிரி வரணும்னு நினைச்சதாலதான் நான் வந்திருக்கிறனான்னு தெரியலை. இருந்தும் எனக்கும் ஒரு இடம் கிடைச்சிருக்கு.
நான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் இதை மாதிரி பேசறாங்க. ஆனால், ரஜினி மாதிரி வரணும்னு நினைக்கிறன்னு நாம பேசும் போது அதை தப்பாவே வெளிய பேச வைக்கிறாங்க,” என்கிறார் சிம்பு.
தன்னையே ரஜினியா நினைக்கிறவங்கதான் இப்படி பேசறாங்க என சிம்பு பேசியிருப்பதன் அர்த்தம் பலருக்கும் புரிந்திருக்கும்.