விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களில் நடித்தவர் கெளதம் கார்த்திக். இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சொன்னபோது அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து கெளதம் கார்த்திக் கூறுகையில், ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடிக்கும்போது எனது இமேஜ் போய் விடும் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் இந்த படங்கள் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. இளவட்ட ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.
அதோடு, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை பார்க்க ஆண்களைப்போன்று பெண்களும் தியேட்டருக்கு வந்தார்கள். இதை நானே பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அதனால், இப்போதைக்கு உடனடியாக அடல்ட் ஒன்லி படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றாலும், ஒரு சிறிய இடைவெளி கொடுத்து மீண்டும் நடிப்பேன் என்கிறார் கெளதம் கார்த்திக்.