மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்வதில்லை.
தம்பி ராமைய்யாவின் மகன் நடித்த அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் ஆடியோ விழாவில் கலந்த கொண்டபோது, சின்ன தளபதி சிவகார்த்திகேயன் என்று அவரை குறிப்பிட்டபோது, அப்படியெல்லாம் சொல்லாதீங்க நான் ரொம்ப சாதாரணமான நடிகன். எனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்று சொன்னார்.
அதையடுத்து நேற்று சென்னையில் ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், ரஜினி, கமல் விஜய், அஜித் இவங்கதான் ஹீரோ. நானெல்லாம் ஹீரோவே கிடையாது. லீடு கேரக்டர்ல நடிக்கிற ஒரு நடிகன் அவ்வளவுதான் என்று தன்னை தாழ்த்திக் கொண்டு பேசினார்.
மேலும், ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு போக வேண்டும். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம் என்றார்.