மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ரங்கூன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் ஏ.ஆர்.முருதாசிடம் உதவியாளராக இருந்து இயக்குனர் ஆனார். ரங்கூன் படத்தையும் ஏ.ஆர்.முருதாஸ் தான் தயாரித்தார்.
ராஜ்குமார் பெரியசாமி சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விஜய் டி.வி நடத்திய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியை இயக்கினார். அப்போது இண்டன்ஷிப் மாணவியாக வந்த ஜஸ்வினிக்கும் அவருக்கும் காதல் உருவானது. கடந்த 9 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தார்கள். ராஜ்குமார் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக சேர்ந்தார். ஜஸ்வினி கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பின்னர் இருவரும் இணைந்து ரங்கூன் படத்தில் பணியாற்றினார்கள். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற 25ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.