மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல நடிகை பூனம் கவுர். தென்னிந்திய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள், என் வழி தனி வழி, நாயகி படங்களில் நடித்தார்.
தற்போது தேவ் என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கும், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கும் மிகவும் நெருக்கம் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தன்னை ஒரு இயக்குனர் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக பூனம் கவுர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். அதில் பதிவிட்டிருப்பதாவது:
அந்த டைரக்டருக்கு அதிக படங்கள் இல்லை. ஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறார். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகிறார், என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார். நான் அது குறித்து நேரில் கேட்டபோது ஒன்றும் தெரியாதவர் போல் பதில் சொன்னார். அவருக்கு வேண்டிய பெண்கள் மட்டுமே சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அவரை பற்றி வெளியே சொல்ல முடியாத பல விஷயங்கள் என்னிடம் இருக்கிறது. அவருக்கு வேண்டிய பெண்கள் தொடர்ந்து தோல்வி படம் கொடுத்த பிறகும் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பது ஏன் என்று புரியவில்லை. மற்றவர்கள் கலை உணர்வுகளை கொலை செய்கிறார். அவர் செய்யும் செயலே அவரை விரைவில் தண்டிக்கும்.
இவ்வாறு பூனம் கவுர் தெரிவித்திருக்கிறார்.
அந்த இயக்குனரின் பெயரை பூனம் கவுர் வெளியிடவில்லை. டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தும் இயக்குனர்தான் அவர் என்கிறார்கள்.