என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றி பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படம், தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் உருவாகி உள்ளது. அரவிந்த்சாமி, அமலாபால், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்திக் இயக்கி உள்ளார்.
இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி மாதங்கள் பல கடந்துவிட்டன. ஏற்னவே நான்கு முறை தள்ளிப்போன இப்படம் இன்று(மே 11) ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் கடைசிநேரத்தில் நேற்று இரவு படம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து படத்தின் ஹீரோவான அரவிந்த்சாமி தன் வருத்தத்தை கோபமாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், பாஸ்கர் தி ராஸ்கல் படம் மீண்டும் ஒரு முறை தள்ளிப்போய் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன். முன்பதிவு செய்த பின்னர் படம் தள்ளிப்போய் இருப்பது எதனால் என்று தெரியவில்லை, என்னால் வருத்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிகிறது.
பட ரிலீஸ்க்கு தயாரிப்பாளருக்கு நான் உறுதுணையாகவே இருந்துள்ளேன். இனி படத்துக்காக எந்த வேலையும் செய்யப் போவதில்லை, புது ரிலீஸ் தேதியை டுவீட் செய்ய மாட்டேன். படம் எப்போது ரிலீஸானாலும் நிச்சயம் ரசிகர்களை கவரும். உங்களைப் போன்று நானும், இப்படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். இன்று ரிலீஸாகும் மற்ற படங்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதவிட்டிருக்கிறார்.