மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி. சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி இயக்கி இருந்தார். இதனை பாலா தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்கி வருகிறார். விக்ரம் மகன் துருவா நடிக்கிறார்.
அர்ஜுன் ரெட்டியில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவும், ஷாலினி பாண்டேயும் இப்போது நடிகையர் திலகம் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதுதவிர விஜய் தேவரகொண்டா, நோட்டா என்ற தமிழ் படத்திலும், ஷாலினி பாண்டே 100 சதவிகிதம் காதல், கொரில்லா படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி இரண்டாம் பாகம் தயாராகிறது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர் சந்தீப் ரெட்டி தீவிரமாக உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "அர்ஜூன் ரெட்டி இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்பது பற்றி நானும் விஜய் தேவரகொண்டாவும் பேசி விட்டோம். 40 வயதில் அர்ஜூன் ரெட்டியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தான் இரண்டாம் பாகத்தின் ஒன் லைன். விஜய் தேவரகொண்டா அர்ஜூன் ரெட்டியாக நடிப்பார், மற்றவர்கள் பற்றி இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
அர்ஜுன் ரெட்டியை, பாலா தமிழில் ரீமேக் செய்வதால் இரண்டாம் பாகத்தை தமிழில் எடுக்கவும், அதிலும் விக்ரம் மகன் துருவாவை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.