மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் திரையுலகில் ஆரம்ப காலங்களிலேயே பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தெலுங்கில் கமர்ஷியல் ஹீரோயினாக மட்டுமே பல வெற்றிப் படங்களில் நடித்தார். ஹிந்தியில் கமர்ஷியல் கதாபாத்திரங்களிலும், பல சிறந்த கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஆனால், இதுவரை அவர் தன் நடிப்புக்காக தேசிய விருது பெற்றதேயில்லை.
'மூன்றாம் பிறை' படத்தில் அவர் நடித்த போது ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்படவில்லை. ஆனால், கமல்ஹாசனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அப்போதே அது கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.
சுமார் 300 படங்களில் நடித்து முடித்த பின், முதல் முறையாக 'மாம்' படத்திற்காக தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஸ்ரீதேவி. ஆனால், அந்த விருதை மறைவுக்குப் பிறகு தான் பெற்றிருக்கிறார் என்பது சோகமான செய்தி.
ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருது பற்றி அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “இவ்வளவு பெரிய மரியாதையைக் கொடுத்த இந்திய அரசாங்கத்திற்கும், விருது குழுவினருக்கும் நன்றி. தொடர்ந்து வாழ்த்துச் செய்தியை அனுப்பிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எங்களது நன்றி,” எனத் தெரிவித்துள்ளனர்.