மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் காளி. இதனை கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் பேக்டரி சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது
விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி, வெளியிட்டதில், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, காளி படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், காளி படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
தற்போது திரையுலக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்ததோடு தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி 4.7 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டிவிட்டு படத்தை வெளியிடலாம் என்று நிபந்தனை விதித்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று 2 நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் விசாரித்தது. அதைத் தொடர்ந்து "மனுதாரார் (பாத்திமா) 2 கோடி ரூபாய் நீதிமன்றத்தின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து விட்டு படத்தை வெளியிடலாம். தனி நீதிபதி விதித்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது" என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.