மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் பாபிசிம்ஹா. நேரம், ஜிகிர்தண்டா என அவர் நடித்த படங்கள் அவரைப் பற்றிய மதிப்பீடுகளை உயர்த்தி பிடித்தது. ஆனால், ஜிகிர்தண்டாவுக்கு பிறகு அவரால் ஒரு வெற்றியை கூட ருசிக்கவே முடியவில்லை.
தற்போது அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மலையாள படமான கம்மரசம்பவம் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். இந்த படத்தில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
சாமி இரண்டாம் பாகம் உட்பட சில படங்களை வைத்திருக்கிறார் பாபி சிம்ஹா. வல்லவனுக்கு வல்லவன் படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. அவரின் புதுப்படத்தை பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார். சினிமாவை தவிர்த்து வெப் சீரீஸிலும் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
வெப் சீரீஸ் புதுமையான கதை அம்சங்களோடு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு தயாரிக்க, காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் ஆகியோர் என்னோடு நடித்திருக்கிறார்கள். டிஜிட்டல் பிளாட்பார்ம் தான் வருங்காலமாக இருக்க போகிறது. சில நேரங்களில் என்னால் திரையரங்கில் படத்தை பார்க்க முடியாதபோது, பின்னர் டிஜிட்டல் பிளாட்பார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது. சினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறார் பாபி சிம்ஹா.