இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் பிறந்து வளர்ந்த விஜய், முன்னணி ஹீரோவான பிறகு தன்னுடைய வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு விட்டுவிட்டு அடையாறுக்கு வீட்டை மாற்றினார்.
அதன் பிறகு அடையாறு வீட்டிலிருந்து தன் மனைவி மக்களோடு நீலாங்கரை வீட்டிற்கு குடிபோனார். அடையாறு வீட்டில் விஜய்யின் அப்பா அம்மா தற்போது குடியிருந்து வருகின்றனர். தற்போது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூர் என்ற ஏரியாவுக்கு வீட்டை மாற்றியிருக்கிறார் விஜய்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் தான் கடந்த சில வருடங்களாகக் குடியிருந்தார் விஜய். அந்த வீட்டை இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் இன்னும் கொஞ்சம் பெரிதாக கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம் அவருடைய குடும்பத்தினர். எனவே, பனையூரில் உள்ள வீட்டுக்குத் தற்போது மாறியிருக்கிறார் விஜய்.