விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
காமெடி நடிகர் ஜெகன், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் படம், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே. மனீஷாஜித், நிகிதா, அஸ்மிதா உள்ளிட்ட பலர், இதில் நடிக்கின்றனர். கவிஞர் பிறைசூடன், வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், டீக்கடை நடத்தும் நாயகிக்கு உதவும் போலீசாக, ஜெகன் வருகிறார். டீக்கடையில் நடப்பதாக, பல காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்தனர்.
படம் குறித்தும், தன் திரைப்பயணம் குறித்தும், ஜெகன் கூறியதாவது: கே.வி.ஆனந்த், கோ படத்தை எடுக்க முன்வந்த போது, முதலில் வேறு ஒரு நடிகருக்கு, போன் செய்தார்; அவர் எடுக்கவில்லை. அதன் பின், ஜீவாவுக்கு போன் செய்தார்; அவர், உடனே எடுத்து விட்டார். இதையடுத்து, கோ படத்தில் நாயகனாகும் வாய்ப்பு, ஜீவாவுக்கு சென்றது. அனைத்து வகையான திறமை இருந்தால் தான், சினிமாவில் ஜெயிக்க முடியும். நான் வளர்ந்த, அதே சின்னத்திரையில் ஜொலித்த பலர், என்னை விட உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். அதற்கு, அவர்களின் உழைப்பு தான் காரணம்.