மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திரையுலகில் நீண்ட நாட்களாகவே நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. சமீப காலமாக கேஸ்டிங் கௌச் என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது. ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தர வேண்டுமென்றால் நடிகைகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என பல நடிகைகள் குற்றம் சாட்டினர். பல பிரபலமான நடிகைகள் கூட தங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
தமிழில் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில் தமிழ் மொழிகளில் நடிக்கும் போது தனக்கும் அப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அங்கு முதல் நாள் படப்பிடிப்பிலேயே பிரபலமான அந்த நடிகர் எனது காலைத் தடவினார். நான் கோபமடைந்து அவரை அடித்துவிட்டேன் என அந்தப் பேட்டியில் ராதிகா தெரிவித்துள்ளார்.
ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழிப் படங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் முதன் முதலில் தெலுங்கில் ரக்த சரித்திரா படத்தில் நடித்துள்ளார். அதன் பின் பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி படத்தில் நடித்திருக்கிறார். தனது பேட்டியில் அந்த நடிகர் யார் என்பதை ராதிகா சொல்லவில்லை. அதனால் அவரிடம் அடி வாங்கிய அந்த பிரபல நடிகர் யார் என்பதும் புரியவில்லை.