மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் மணிரத்னத்தை பொறுத்தவரை கதைக்கு தேவையான சின்ன நடிகர்கள் வேறு எந்த மொழியில் இருந்தாலும் தேடிப்பிடித்து அழைத்து வந்துவிடுவார். அப்படித்தான் மலையாள திரையுலகை சேர்ந்த 'அப்பாணி' சரத்குமார் என்கிற நடிகரை தன்னுடைய 'செக்க சிவந்த வானம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்
கடந்த சில நாட்களாக செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் 'அப்பாணி' சரத்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் அறிமுகமாகி 'அப்பாணி ரவி' கேரக்டரில் கவனிக்கவைத்தவர் தான் இந்த சரத்குமார்.
தொடர்ந்து மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல்' பாடல் இவரை பிரபலமாக்கியது. இப்போது தமிழில் 'சண்டக்கோழி-2'வில் வில்லனாக, ராஜூ முருகன் கதையில் புதியவர் சரவணன் ராமச்சந்திரன் இயக்கும் படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் அப்பாணி சரத்.