ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை தேவதர்ஷினி தற்போது சினிமாவிலும் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து வருபவர், தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த சேனலில் இருந்து விலகி, தற்போது ஜீ தமிழ் சேனலில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார். இடையிடையே சினிமாவிலும் நடிக்கிறார்.
இதற்கு முன்பு அவர் முன்னணி சேனலில் சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஒவ்வொரு வாரமும் புதிய கான்செப்ட்டுகள், நாட்டு நடப்புகளை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. 6 ஆண்டுகள் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுவை குறைந்து விட்டதாக சேனல் நிர்வாகம் கருதியதாக தெரிகிறது. இதனால் தேவதர்ஷினி அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை விட வெரைட்டியாக நிகழ்ச்சி பண்ணலாம் என்று முடிவெடுத்து தான் சண்டே கலாட்டா நிகழ்ச்சியிலிருந்து விலகியதாக தேவதர்ஷினி தரப்பு தெரிவிக்கிறது.